கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.!

Saturday, September 21st, 2019

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெள்ளிக்கிழமை டொராண்டோவில் உள்ள ஊடகம் வாயிலாக உறுதிப்படுத்துள்ளனர்.

மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை பிளாசாவில் இரவு 10 மணிக்கு சற்று முன்பு சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட வாகனத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். “காயங்கள் மிகவும் கடுமையானவை, அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என ஸ்கார்பாரோ பொலிஸ் அதிகாரி ஜிம் கோட்டல் என்பவர் செய்தியாளர்களிடம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோகித்த சந்தேக நபர் தொடர்பாக எந்த தகவலையும் பொலிஸார் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் படுகொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் மக்கள் இருந்ததாக பொலிஸ் அதிகாரி கோட்டல் கூறினார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரும் பொலிஸ் அல்லது க்ரைம் ஸ்டாப்பர்களை அநாமதேயமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Related posts: