விக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை!
Thursday, May 2nd, 2019விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரித்தானிய நீதிமன்றத்தால் 50 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன.
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
Related posts:
வேற்று நாட்டு படைகள் வெளியேறும் வரை அமைதி பேச்சுக்களில் பங்கேற்க தலிபான்கள் மறுப்பு!
அகதிகளை தாக்கிய பெண் பத்திரிகையாளர் மீது வழக்கு!
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது வழக்கு!
|
|