ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் மரணமடைந்தார்!

Sunday, March 29th, 2020

ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்த தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களை உலுக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கதிகலங்கிப் போயுள்ளன.

சீனாவை விட ஐரோப்பிய நாடுகள் பல கடுமையாக பாதிகப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்தார் என்ற தகவலை அவரது சகோதரர் வெளியிட்டுள்ளார்.

உலகில் கொரோனா பாதிப்புக்கு பலியாகும் முதல் அரச குடும்பத்து உறுப்பினர் இவர் என கூறப்படுகிறது.

இளவரசி மரியா தெரசாவின் மறைவு அரச குடும்பத்து உறுப்பினர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது

Related posts: