விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் – ஜெ.தீபா

Saturday, February 25th, 2017

விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் எனவும் தனது அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டத்தாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்ததினமான இன்றையதினம் தனது புதியகட்சி தொடர்பான அறிவிப்பை தொண்டர்கள் மத்தியில் வெளியிட்டபோதே  இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அம்மாவின் நல்லாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அவரது நல்லாசியைப்பெற்று இன்று முதல் தீவிர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்.

நாம் எமது உரிமைகளையும் உடமைகளையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது. “மக்களால் நான், மக்களுக்காக நான்”என்ற பாதையில் அம்மாவின் வழியைப் பின்தொடர்ந்து நமது இலட்சியப்பாதையை வகுத்து வெற்றி பெறுவோம்.

எல்லோரது கபடமான நாடகங்களும் விரைவில் வெளிவரும் என்பது உண்மை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்களுக்காக பணியாற்றுபவர்கள் யார்என்று மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.

நாம் ஆரம்பித்துள்ள இந்த அமைப்பின் மூலம் மக்கள் பணியாற்றி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இரட்டை இலை சின்னமான அ.தி.மு.கவை விரைவில் கைப்பற்றுவேன்”என அவர் இதன் போது உறுதிமொழி வழங்கினார்.

deepa_Jaya_Liveday

Related posts: