விஜயகாந்தை வீட்டுக்கு அனுப்பியது தேர்தல் ஆணையம்!

Sunday, May 22nd, 2016
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தே.மு.தி.க 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.

இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால் தேமுதிகவுக்கு முரசு சின்னம் நிரந்தரமாக கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்.எல்.ஏ.க்களாவது இருக்க வேண்டும்.

அல்லது, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்.

Related posts: