வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்க ஜனாதிபதி!

Friday, June 28th, 2019

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள வரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வரி அதிகரிப்பை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்காவுக்கு எதிராக இந்திய கடந்த சில ஆண்டுகளாக அதிக வரியை விதித்துவந்துள்ள நிலையில், அண்மையில் அதனை அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பக்க அமர்வுகளாக உலக நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் இடம்பெறவுள்ளன

இதற்கமைய, ட்ரம்புக்கும், மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: