வரலாறு காணாத பனிபொழிவை சந்தித்துள்ளது ஐரோப்பிய நாடுகள்!
Friday, March 2nd, 2018
வரலாறு காணாத அளவில் ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் பனிபொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் மைனஸ் 12 டிகிரிக்கும் கீழ் குளிர் நிலை பதிவாகியுள்ளது. லண்டனில் பனிப்பொழிவு உச்சக்கட்டத்தை அடைந்ததால் வீதிகளில் பல அடி உயரத்திற்குபனித்துகள்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் வாகனம் மற்றும் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் உச்சக்கட்டமாக 40 செ.மீ. அளவுக்கு பனி ஏரிகளாக மாறியுள்ளன. அங்குள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் கொட்டித் தீர்த்த பனிப்புயலால் விமான ஓடுதளம் முழுவதும்பனிமயமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே காத்து கிடக்கின்றனர்.
Related posts:
உர்ஜித் படேல் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரானார்!
ஈராக்கின் மறுசீரமைப்பிற்கு 2 பில்லியன் டொலர் வழங்கும் குவைத்!
தலைமை கொல்லப்பட்டதாக IS பயங்கரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது!
|
|