வடகொரியாவில் வறட்சி!
Saturday, July 22nd, 2017வடகொரியாவில் மிக கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறார்களும் முதியவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய நிலைமை வடகொரியாவிற்கு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு வடகொரியாவில் நிலவிய பஞ்சத்தின் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவிட்சர்லாந்தின் யுத்த விமானம் திடீர் மாயம்!
கடும் மழை – நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் : ரோபோக்கள் மூலம் தாதியர்களுக்கு பாதுகாப்பு!
|
|