ராம்குமார் வாயில் வயரைத் திணித்து துடிக்க துடிக்க கொலை : மருத்துவர் அடுத்த தகவல்!
Wednesday, October 5th, 2016
இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை.
இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே கிடையாதா..? இப்படித்தான் அழுது புலம்புகிறது ராம்குமார் கிராமம். வந்து பிணத்தை கடைசியாக பார்த்த அனைவருமே கதறி அழுதது இந்த ஜென்மம் முழுக்க மறக்க முடியாத சோகம் என்கிறார்கள்.
அதில் ஒரு மருத்துவர் சொன்ன தகவல் தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப் படுகிறது. ராம்குமார் மரணம் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று தெளிவாகக் கூறுகிறார் அந்த இயற்கை மருத்துவர்.
அதாவது முகம் முழுவதுமே தீய்ந்து போய் இருக்கிறது. ஒரே கடியில் இப்படி தீய்ந்து போகாது. கடித்த உடனேயே தூக்கி எறிந்து விடும். இது கை கால்களை கட்டிபோட்டு, வாய்க்குள் வயரை திணித்து தாடையை நன்றாக கட்டிபோட்டு பின்பு கரன்ட் செலுத்த பட்டிருக்கிறது.
இது மிகஅதிக வலியை தரும். ஒரே நேரத்தில் மூளை நரம்புகள் தலையின் நரம்புகள் வேக ஆரம்பித்து துடிக்கச் செய்யும் பற்கள் தெறிக்கும். நாக்கு பொசுங்கி உள்ளே சுருண்டு விடும். எதிரிகளுக்கு கூட இப்படி ஒரு மரணம் நேரக்கூடாது. இந்த சின்னப் பையனுக்கு இந்த கொடூர தண்டனை எதற்காக? என்கிறார் அந்த இயற்கை மருத்துவர்.
இத்தகவலானது தற்போது சமூகவலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|