ரஷ்ய தீப்பரவலில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
Tuesday, March 27th, 2018ரஷ்ய சைபீரிய நிலக்கரி சுரங்க நகரான கீமிரோவோவில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ள நிலையில் 10 பேர் காணாமல் போய் உள்ளதாகவும்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் இடம்பெறும் கட்டட தொகுதியின் மேல் தட்டில் உள்ள திரை அரங்கிலேயே ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பலியானவர்களில் பலர் சிறார்கள் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் கவனயீனம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் ஏனைய கட்டட தொகுதிகளின் பாதுகாப்பு முறைமைகள் சீரமைக்கப்பட வேண்டும் எனவும் ரஷ்ய சிறார்களின் நலன்களைபேணும் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
17 மணி நேரத்திற்கு மேலாக 660 அவசரகால மீட்பு பணியாளர்கள் போராடி தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
Related posts:
|
|