மெக்சிக்கோவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, September 21st, 2017

மெக்சிகோவில் இடம்பெற்ற நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களில் 21 முன்பள்ளி மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.7.1 மெக்னிரியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானது.இதில் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளளனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி என்றிக் மெனா நீடோ விஜயம் செய்ததுடன் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்..

Related posts: