பெருவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!
Sunday, September 11th, 2016பெரு நாட்டின் வட பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
மொயாம்பமா நகரின் வடக்கே 50 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சான் மார்ட்டின் பிராந்திய தலைநகரான மொயாம்பமா நகரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா? என தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நேற்று முன்தினம் வடகொரியா 5வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டபோது அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நேரில் பார்த்தோம் - இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி!
தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்!
உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் - அமெரிக்க ஜனாதிபதியின்...
|
|