நேரில் பார்த்தோம் – இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி!

Monday, March 4th, 2019

பாக்கிஸ்தானில் பாலகோட் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் சாட்சியமளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை எனவும், இந்தியா பொய் சொல்வதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில் பாலகோட் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கு அருகில் இந்திய எல்லையில் வசிக்கும் மக்கள் சாட்சியமளிக்கையில் தாக்குதலை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், இந்திய இராணுவம் குறித்த தாக்குதலை மேற்கொண்ட பின் அந்த பகுதியை பாகிஸ்தான் இராணுவம் சுற்றிவளைத்து விட்டதுடன், மக்கள் யாரையும் அங்கு விடவில்லை.

இந்த சம்பவத்தில் எங்களுக்கு தெரிந்தவரையில் 35 பேர் பலியாகியுள்ளனர். அதில் 12 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். சிலர் முன்னாள் இராணுவ வீரர்கள்.

பலியாகியவர்களின் சடலங்கள் நோயாளர் காவு வண்டிகள் மூலம் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அங்கிருந்த யாரும் கையடக்க தொலைபேசி பயன்படுத்தவில்லை.

அதனால் யாரும் அங்கிருந்த சடலங்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை. இதனால்தான் புகைப்படம் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: