முடிவு உக்ரைன் கைகளில் உள்ளது – போரை முடிவிற்கு கொண்டுவர ரஷ்யா வெளியிட்டது அறிவிப்பு!

Thursday, April 21st, 2022

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது –

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது.

அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உக்ரைன் தான் காரணம்.

முன்னர் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து உக்ரைன் விலகி வருகிறது. பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உக்ரைன் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: