மீண்டும் பப்புவா நியூ கினியாவில் பாரிய நில நடுக்கம்!
Monday, March 5th, 2018
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரம் இந்தத் தீவில் இடம்பெற்ற 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வில் 31 பேர் வரையில் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிலிப்பைன்ஸில் 50 போலிசார் இடைநீக்கம் !
இலண்டன் தாக்குதலின் எதிரொலி - 500 பேருக்கு புகலிடம் மறுப்பு!
டோரியன் சூறாவளி: இதுவரை 05 பேர் உயிரிழப்பு!
|
|