மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Friday, December 28th, 2018

இந்தோனேஷியா மேற்கு பப்புவா மாநிலத்தில் இன்று நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பப்புவா நியூகினியா தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வை தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட திடீர் சுனாமி காரணமாக பொதுமக்கள் தொடர்ந்தும் அச்சத்துடனே காணப்படுகிறமை இதற்கு பிரதான காரணமாகும்.

Related posts: