மலேசிய வானூர்தி மீது தாக்குதல் – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Saturday, May 26th, 2018

மலேசிய வானூர்தி ஏவுகணையால் தாக்கப்பட்டதாலேயே விபத்துக்குள்ளானது  என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH17 பயணிகள் வானூர்தி 283 பயணிகள் மற்றும் 15 வானூர்தி ஊழியர்கள் என 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

ரஷ்ய எல்லையருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. உக்ரைனின் எல்லையில் இருந்து, ரஷ்ய எல்லைக்குள் வானூர்தி நுழைய வேண்டிய தருணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் வானூர்தியில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் வானூர்தி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவுத் தலைவரான வில்பர்ட் பவுலிஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஏவுகணை ரஷ்யாவின், வானூர்தியைத் தாக்கி அழிக்கும் இராணுவத்தின் பிரிவிலிருந்து ஏவப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு ரஷ்யா தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Related posts: