மரண தண்டனை வழங்கப்படும் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக சீனா அறிவிப்பு!
Tuesday, September 13th, 2016
மிகவும் கொடிய குற்றங்கள் இழைப்போருக்கு மட்டும் மரண தண்டனை வழங்கி மரண தண்டனை பெறுவோரின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கவுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
பிற நாடுகளை விட சீனா ஒவ்வோர் ஆண்டும் அதிக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி வருவதாக நம்பப்படுகிறது. ஆனால் சரியான எண்ணிக்கை அந்நாட்டின் ரகசியமாகவே இருக்கிறது.குற்றமறியாத பலருடைய இறப்புக்கு வழிகோலிய பல பிரபலமான தவறான தீர்ப்புகளை தொடர்ந்து, குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் அழுத்தங்களை சந்தித்து வருகிறார்கள்.
இருப்பினும், அரசை மேற்பார்வை செய்கின்ற அதிகாரத்தோடு, நீதி அமைப்பை சுதந்திரமான அமைப்பாக உருவாக்குதற்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
Related posts:
அமெரிக்காவை அதிரவைத்த கொலைகாரன்!
ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது!
மூன்றாம் உலகப்போர் தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை - ஐக்கிய நாடுகளின் செயலாளர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு!
|
|