மத வேறுபாடு இல்லாது அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை – கனடியப் பிரதமர்!

Monday, May 1st, 2017

கனடாவின் மேற்கு மாகாணமான Saskatchewan இல், கத்தோலிக்க பள்ளிகளில் படிக்கும், கத்தோலிக்கர் அல்லாத மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல்லாயிரம் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணத்திற்கு சென்ற கனடா பிரதமர், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திரந்ததுடன்  இந்த உத்தரவை எதிர்த்து மாநில முதலமைச்சர் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் தனது தலைமையிலான மத்திய அரசு அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்கர்கள் அதிகம் இருந்தும், அவர்கள் எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் சிறுபான்மை மதத்தவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துள்ளார் கனடா பிரதமர். மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ மக்களை பிளவுபடுத்துவதை விரும்பாதவர் கனடா பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: