மத்திய பிரதேசத்தில் பரவும் வன்முறை!

Friday, June 9th, 2017

மத்திய பிரதேசத்தில் 6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் வீதிகளில் காணப்பட்ட வாகனங்களை  தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள், அங்குள்ள கடைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, விவசாயிகளை பார்வையிட அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர்களையும் போராட்டக்காரர்கள் விரட்டியடித்துள்ளனர்.

அத்தோடு அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைகள் பரவியுள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக குறித்த பகுதிகளுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: