பிரான்ஸில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

Wednesday, December 12th, 2018

கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராபோர்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் வரையில் காயமடைந்தனர்.

குறித்த தாக்குதல் நடத்தியவரை பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை தேடும் பணிகளை காவற்துறையினர் மேற்கொள்வதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் க்றிஸ்ட்மஸ் சந்தை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் தீவிரவாத முறியடிப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை காயமடைந்தவர்களில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நடத்தியவர் ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் சந்தேகத்தின் பேரில் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

Related posts: