பிரபல எழுத்தாளர் சுட்டுக் கொலை!

Thursday, June 14th, 2018

தெற்காசிய நாடான வங்க தேசத்தில், பிரபல எழுத்தாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வங்கதேசத்தைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளர், ஷாஜஹான் பச்சு, 60. மதச் சார்பற்ற கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தவர்.

இடதுசாரி கட்சியிலும், முக்கிய பொறுப்பில் இருந்தார். இவருக்கு, மதவாதிகளிடம் இருந்து, கொலை மிரட்டல்கள் வந்தன. நேற்று முன்தினம், தன் வீட்டுக்கு அருகில் உள்ள, ஒரு மருந்தகத்தில், தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த, பச்சுவை, பைக்கில் வந்த மர்ம நபர்கள், கடைக்கு வெளியில் இழுத்து வந்து, துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts: