பாலர் பாடசாலை அருகே தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- இருவர் பலி!

Wednesday, September 7th, 2016

தாய்லாந்தில் பாலர் பாடசாலை ஒன்றின் அருகே குண்டு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தின் Narathiwat பகுதியில் இன்று காலை பாலர் பாடசாலையின் முன்னால் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. இதனால் தனது மகளை அழைத்துச் சென்ற தந்தை மற்றும் சிறுமி ஆகியோரே குறித்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

download (1)

A school bag lies on a street next to the site of a bomb attack at Tak Bai district in the troubled southern province of Narathiwat, Thailand, September 6, 2016. REUTERS/Surapan Boonthanom

Related posts: