பாடசாலையில் தீ விபத்து – கென்யாவில் 7 பேர் பலி!

Sunday, September 3rd, 2017

கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 7 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீ விபத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.இந்த நிலையில் குறித்த பாடசாலையை எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடுமாறு நைஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நைஜீரியாவின் கல்வியமைச்சர், பாடசாலை நிர்வாகத்தினருக்கு இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.

கென்யாவில் பாடசாலை விடுதிகளில் இதற்கு முன்னரும் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 58 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததுடன், கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் 8 மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.

Related posts: