பாகிஸ்தானில் கனமழை – 48 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழப்பு!
Monday, March 4th, 2024பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அசாத் காஷ்மீர் மற்றும் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் 48 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வீடுகள் இடிந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பலுசிஸ்தான் மற்றும் பிவிகே ஆகிய இடங்களில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். குவாதார் துறைமுக நகரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்!
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்துத் தபால் நிலையங்களும் திறக்கப்படும் - தபால் மா அதிபர் அறிவிப்பு!
வறுமை வீதம் இரட்டிப்பாகின்றது - இலங்கையை எச்சரிக்கும் உலக வங்கி!
|
|