அடுத்த மாதம்முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, July 20th, 2023அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அவர் தமது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் தொடர்பில் இன்று இலங்கை கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எரிபொருள் இறக்குமதி, கையிருப்பு, எரிபொருள் ஒதுக்கம், எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தம் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
000
Related posts:
நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்!
அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்ட...
தமிழர்களுக்குத் தீர்வு வழங்க ராஜபக்சக்கள் தயாராகவே இருந்தார்கள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பின...
|
|