பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து!

Thursday, March 30th, 2017
பருவநிலை மாற்றம் தொடர்பான தடைகளை நோக்கமாக கொண்டு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறும் நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் நிலக்கரி எரிசக்தி மீதான தடை நடவடிக்கைப் போரையும், பணியிடங்களை கொல்லும் விதிகளையும் முடிவுக்கு கொண்டு வர இயலும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்கள் புடை சூழ பேசிய டிரம்ப், இந்த புதிய நிர்வாக ஆணை பல புதிய பணிகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

Related posts: