பயங்கரவாத அச்சுறுத்தலால் தாய்லாந்தில் 3 மாகாணங்களில் புகையிரத சேவை இடை நிறுத்தம்!
Monday, September 5th, 2016தாய்லாந்தின் தெற்கில் உள்ள மூன்று மாகாணங்களில் ரயில் சேவைகளை ரயில்வே துறை அதிகாரிகள் இடை நிறுத்தியுள்ளனர்.
பட்டானி நகரில் ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து இந்த இடை நிறுத்தம் நடந்துள்ளது.குண்டு வெடித்ததில் தண்டவாளம் மீது சென்ற ரயிலின் ஒரு பெட்டிசுக்குநூறாக சிதறியதில், ஒரு ரயில்வே ஊழியர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.தாய்லாந்தின் இப்பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் வழக்கமான ஒன்று.இந்த பகுதிகளில் அரசியல் சுதந்திரம் வேண்டி திட்டமிட்டு ஒருங்கிணைந்து கிளர்ச்சியாளர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவாதி கதையில் திருப்பம் - ராம்குமாரின் கழுத்தை வெட்டியது பொலிஸ் இன்ஸ்பெக்டர்..??
துப்பாக்கிச் சூடு - இத்தாலியில் 6 பேர் காயம்!
ஜப்பானில் வரலாறு காணாத புயல்!
|
|