பதவி விலகினார் தென்னாபிரிக்க ஜனாதிபதி.!
Friday, February 16th, 2018
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா பதவி விலகியுள்ளார். அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் அவர் இறுதியாக உரையாற்றியுள்ளார்.
முன்னதாக, தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி ஸூமாவை பதவி விலக வலியுறுத்தியது.எனினும் அதனை அவர் ஏற்கவில்லை.
இந்த நிலையில், 75 வயதான துணை ஜனாதிபதி சிரில் ரமபோசாவை தேசிய காங்கிரஸ் புதிய தலைவராக தேர்வு செய்தது.
2009 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஜேக்கப் ஸூமா பல ஊழல்களை மேற்கொண்டுள்ளதாக சுற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரின் ஊழலுடன் தொடர்புடைய குப்தா குடும்பத்தினர் வீட்டில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, ஜேக்கப் ஸுமா பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழர் மீது துப்பாக்கி சூடு: கனடாவில் நகையகத்தில் ஆயுததாரிகள் அட்டகாசம்!
பேஸ்புக் தடை: மாற்று வலைத்தளம் அறிமுகம்!
பலஸ்தீனத்துக்கு வலுக்கும் ஆதரவு - அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் ஆதரவுப் பேரணி !
|
|
|


