பேஸ்புக் தடை: மாற்று வலைத்தளம் அறிமுகம்!

Wednesday, May 30th, 2018

ஒரு மாதகாலத்திற்கு  பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்ய பப்புவா நியூ கினி இராச்சியம் தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது முக்கியமாக  உள்நாட்டு தகவல்கள் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள், போலியான கணக்கு உரிமையாளர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக பேஸ்புக் சமூகவலைத்தளத்தை ஒத்த சமூக வலைத்தளமொன்றை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: