பங்களாதேஷில் வெடிப்பு சம்பவம் – 15 பேர் பலி!
Wednesday, March 8th, 2023பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவத்தால் 7 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தின் இரு மாடிகள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈராக் எல்லையில் துருக்கி தயார் நிலை!
கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு – பதற்றத்தில் குடும்பங்கள்!
கொரோனா தொற்று: British Airways இன் அதிரடி முடிவு!
|
|