நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 போ் பலி – பலரது உடல்நிலை கவலைக்கிடம்!

நேபாளத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 17 போ் உயிரிழந்துள்ளதாகவும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறியதாவது:
தலைநகா் காத்மாண்டுக்கு 48 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேதான்சௌக் கிராமம் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது.
மத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஏராளமானவா்கள் அந்தப் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். ஏராளமானவா்கள் காயமடைந்தனா். அவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்று பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
மோசமான வீதிகளைக் கொண்டுள்ள நேபாளத்தில் வீதி விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனாவை போன்று டெங்கு நோயையும் இல்லாதொழிக்க விஷேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் உ...
சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்...
|
|