கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் அங்கத்தவர்கள் மத்தியில் ரணில்!
Tuesday, May 9th, 2017
கடந்த டிசம்பரில் திட்டமிடப்பட்ட கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்புக்காக மூன்று பிரதிநிதிகளை நியமனம் செய்வதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவு பின்னர் ஒத்திவைக்கப் பட்டது பதுளை மாவட்டத்தில் இடம் பெற்ற கட்சி அங்கதவர்களுடனான சந்திபோன்றில் இவற்றை தெரவித்த ரணில் விக்கிரமசிங்க மே தினம் முடிந்ததும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று நான் சொன்னேன். அந்த வகையில் இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. எங்கள் கட்சியின் இளம்உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரவித்தார்.
மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 2015ல் கட்சியின் எடுத்த தீர்மானதின் பிரகாரம் மத்திய அரசாங்கத்தை மட்டுமல்லாமல் மாகாண சபைகளையும் உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு நாம் உழைக்க வேண்டும் எனவும் ரணில் அங்கே தெரிவித்தார்.
Related posts:
|
|