நிலநடுக்கம் : இந்தோனேஷனியாவில் 15 பேர் பலி!

Monday, July 30th, 2018

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் 15 பேர் உயிரிழந்தனர். 5௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்த, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகேயுள்ள சுற்றுலா தலமான, லோம்பாக் தீவில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வு, ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவாகியுள்ளது.இதனால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, 15 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த, 5௦க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. லேசான அதிர்வை உணர்ந்ததுமே, கட்டடங்களில் இருந்து பலர் வெளியே ஓடியதால் உயிர் தப்பினர்.கடுமையான நிலநடுக்கம் என்றாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடந்த, 2004ல், சுமத்ரா தீவில், 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது சுனாமி உருவானது குறிப்பிடத்தக்கது

Related posts: