நிலநடுக்கத்தை அடுத்து எரிமலை வெடிப்பு!

Tuesday, December 25th, 2018

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது.

நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது.

இதனால் அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை.

எட்னா எரிமலை வெடிப்பு குறித்து இத்தாலியின் பூகோளவியல் மற்றும் எரிமலைகள் பற்றிய தேசிய ஆய்வு நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts: