நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 5 பேர் பலி!
Saturday, February 9th, 2019
தென்ஆபிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென் ஆபிரிக்காவின் முமாலங்கா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் செயற்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.
இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் உள்ள செப்பு கம்பிகளை திருடுவதற்கு 20 பேர் கொண்ட கும்பல் நுழைந்த போது திடீரென காஸ் வெடித்ததில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையரை தேடி தமிழக பொலிஸார் வலைவீச்சு!
கடும் மழை எதிரொலி: சென்னை வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன!
போதை மறுவாழ்வு நிலையத்தில் தீ - 24 பேர் பலி!
|
|
|


