நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

Tuesday, November 1st, 2016

சீனாவில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காணாமற்போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சுரங்கத்தில் எரிவாயு வெளியேறியமை தான இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமற்போனதாக கூறப்படும் 20 சுரங்கத் தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையில் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் Shandong மாகாணத்தில் நடைபெற்ற சுரங்க விபத்தில் சிக்கிய 4 சுரங்கத் தொழிலாளர்கள் 36 நாட்களின் பின்னர் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

china

Related posts: