உலகுக்கு சவுதி இளவரசர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, October 2nd, 2019


ஈரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியொன்றில், கஷோக்ஜி கொலை குறித்து தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து பேசியிருக்கிறார்.

சவுதி அரசை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் கஷோக்ஜி, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

இது குறித்து ஞாயிற்று கிழமை வெளியான பேட்டியில் பேசியுள்ள சல்மான், டுடுசௌதி அரேபியாவின் தலைவராக இந்த விவாகரத்தில் நான் முழுப்பொறுப்பேற்கிறேன். குறிப்பாக சௌதி அரசுக்காக வேலைபார்க்கும் சில தனி நபர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பொறுப்பேற்கிறேன்டுடு என்றார்.

ஆனால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாகவோ அல்லது கஷோக்ஜி கொலை செய்யப்படுவது குறித்து ஏற்கனவே தனக்கு தெரியும் என கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவித்தார்.

சவுதி அரசு இந்த கஷோக்ஜி கொலை விவகாரம் குறித்து 11 பேரை சிறையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சௌதி அரேபியாவுக்கு இரான் எதிரி நாடு. ஜனாதிபதி டிரம்ப் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்தபிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றின் மீது 18 டிரோன்கள் மற்றும் ஏழு குரூஸ் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சௌதி கூறியது.

யேமெனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியது. ஆனால் சௌதியும் அமெரிக்காவும் உலக அளவில் எண்ணெய் விலை 5% அதிகரிக்க காரணமான இந்த தாக்குதலுக்கு பிண்ணனியில் ஈரான் இருப்பதாக கூறின.

Related posts: