சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து!

Friday, February 16th, 2018

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன் இவை பயன்பாட்டுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, விமான நிலையத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழுவதும், சில சமயங்களில் மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று(15) காலை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு முனையத்தின் 3-வது நுழைவாயிலில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என தெரிவித்துள்ளனர்

Related posts: