நியூயோர்க் மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிச் சூடு!

Saturday, July 1st, 2017

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது பெண் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.நியூயோர்க்கில் உள்ள ப்ரொன்ஸ் லெபனன் மருத்துவமனையில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் அந்த மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தின்போது அவர் தம்மைத் தாமே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த துப்பாக்கிப் பிரயோகமானது தீவிரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், அது பணியிட பிரச்சினை தொடர்பானது என்றும் நகர மேயர் பில் டி ப்ளஸியோ தெரிவித்துள்ளார் இந்த நிலையில், குறித்த சம்பவம் நியூயோர்க் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: