தொடர் மழையால் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்!

Tuesday, July 11th, 2017

திபெத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாடி குடியிருப்பு கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. இச் சம்பவம் அப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்தில் ஸிக்கு ஆற்றின் அருகே அமைந்திருந்த இந்த குடியிருப்பின் அஸ்திவாரம் பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்படவே, இதனால் பாதிப்புக்குள்ளான கட்டிடமும் சரிந்து விழுந்துள்ளது.

குறித்த கட்டிடம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதை உணர்ந்த நிர்வாகிகள் உடனடியாக அந்த குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரையும் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு இடம்மாற்றியுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகளின் கணிப்புக்கு முன்னரே குறித்த கட்டிடமானது சரிந்து விழுந்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் இந்த மழைக்காலத்தில் மட்டும் இதுவரை 24 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சிலவற்றை பெருவெள்ளம் அடித்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related posts: