தைய்வானில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து – விமானி ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, March 24th, 2021

ஐதய்வானின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான பிங்டங் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்5 ரக போர் விமானங்கள் நான்கு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அதில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத் தளத்தை விட்டு கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு 2 விமானங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தன. இதையடுத்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் மாயமான விமானங்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதில் 2 விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும் விமானி ஒருவர் சுயநினைவை இழந்த நிலையில் கடலில் இருந்து மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் மற்றொரு விமானி மாயமாகியுள்ள நிலையில் அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அதே சமயம் அங்கு உள்ள ஒரு நெடுஞ்சாலையில் விமானத்தில் இருக்கை மற்றும் பாராசூட் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாயமான அந்த விமானியை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: