துப்பாக்கிச் சூடு –  இத்தாலியில் 6 பேர் காயம்!

Sunday, February 4th, 2018

இத்தாலியின் மகெரேடா (Macerata) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 ஆப்பிரிக்க குடியேறிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்று, அந்த பகுதியில் உள்ள ஆப்பிரிக்கர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய இத்தாலியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இத்தாலிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: