துபாயில் பயங்கர தீ விபத்து!

Wednesday, March 30th, 2016

ஐக்கிய அரசு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் மிகச்சிறியது, அஜ்மான் ஆகும். இது துபாயில் இருந்து 14 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சோவான் பகுதியில், 12 பிரிவுகளாக 3 ஆயிரம் வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வானைத் தொடும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டவை ஆகும்.

அந்த பிரிவில் ஒன்றின் பக்கவாட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத்தொடங்கியது.

உடனடியாக ஷார்ஜா மற்றும் அஜ்மான் சிவில் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸ் படையினரும் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். தீ விபத்து நடந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர். பல மணி நேரம் போராடிய பின்னர்தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. இருந்தபோதிலும் 5 பேர் தீக்காயம் அடைந்தனர்

Related posts: