தி இன்டிபென்டண்ட் நாளிதழ் பதிப்பு நிறுத்தம்!
Sunday, March 27th, 2016பிரிட்டனில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தி இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக் கொள்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல் இணையத்தில் மட்டுமே படிக்கக் கிடைக்கும்.
பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று இம்மாதிரி மாறுவது இதுவே முதல்முறையாகும். 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய செய்தித் தாள் ஒன்று அச்சுப்பதிப்பை நிறுத்துவதும் இதுவே முதல்முறையாகும்.
1986ல் நிறுவப்பட்ட இந்த நாளிதழ், ஆரம்பத்தில் மிக வெற்றிகரமான நாளிதழாகவே இருந்துவந்தது.அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமைக்கென பிரத்யேகமான பதிப்பும் வெளியாக ஆரம்பித்தது.ஆனால் சமீப காலமாக இந்த நாளிதழின் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்துவந்தது.ஆனால், அதன் இணைய வடிவத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
Related posts:
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராகும் எரிக் சொல்ஹெய்ம்
காணாமல்போன அணு குண்டை தேடும் கனேடிய கடற்படை!
இலங்கைக்கு ஈரான் சாபாநாயகர் விஜயம்!
|
|