தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது!

தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு பதிவாகியுள்ளது. ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜப்பானின் ஒக்கினாவா தீவு, மியா கோஜிமா தீவு உள்ளிட்டவற்றுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மீற்றர் உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தாய்வானின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலண்டன் கத்திக்குத்தில் ஒருவர் பலி!
கலைஞர் கருணாநிதிக்கு தொடர்ந்தும் சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் முக்கிய பிரமுகர்கள்!
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு - கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் இன்றும் பல...
|
|