ஜெர்மனியிலும் பயங்கரவாத தாக்குதல் ஒருவர் பலி – 3 பேர் காயம்

Sunday, September 17th, 2017

லண்டனை அடுத்து ஜெர்மனியிலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.பேர்லினில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு பேர்லினில் உள்ள Hohenschönhausen பகுதியில் இரவு நேர விடுதிக்கு முன்பாக இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்ததுப்பாக்கி சூடானது அந் நாட்டு நேரப்படி அதிகாலை 2.15 அளவில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த மூவரும்ஆபத்தான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் காரணமாக ஜெர்மன் மக்களிடையே பீதி நிலைகாணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. என்ன நோக்கத்திற்காக இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரைஉறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஜெர்மனியில் பல தடவை தாக்குதல்கள்நடத்தியுள்ள நிலையில், இத் தாக்குதலுடன் அவர்கள் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  தாக்குதல் சம்பவம்தொடர்பில் ஜெர்மன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்றுமேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக, 29 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: