ஜி – 20 உச்சிமாநாடு: காலநிலை மாற்றம் தொடர்பில் அக்கறை

Sunday, July 9th, 2017

ஜேர்மனியில் நடைபெற்ற ஜி – 20 உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று  ஆரம்பமான குறித்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை குறித்த உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனியின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன் அவை மோதலில் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது. நடத்தப்பட்ட ஆர்ப்பாடத்தின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 76 பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றனர்.குறித்த ஆர்ப்பாட்டங்களை கட்டுக்கு கொண்டு வரும் பொருட்டு பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

Related posts: