ஜப்பானைத் தாக்கவுள்ளது சக்திவாய்ந்த சூறாவளி!
Monday, September 3rd, 2018ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த சூறாவளியொன்று தாக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜேபி என அழைக்கப்படும் இந்த சூறாவளி ஜப்பானை நோக்கி 252 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்வதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.
நாளை ஜப்பானின் பிரதான தீவுகளை இந்த சூறாவளி தாக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் ஜப்பானில் ஏற்பட்ட கடும் புயலினை தொடர்ந்து ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 220 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹிலாரியைப் பார்த்ததும் திரும்பி நின்ற மக்கள்!
ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்த வேண்டுமென உக்ரேய்ன் கோரிக்கை!
பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
|
|