ஜப்பானில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, September 23rd, 2016

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. எனினும், கடலில் அலைகளின் எழுச்சி மிக வேகமாக இருக்கும். இதனால், ஜப்பானுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

earthquake-logo__1_

Related posts: